இந்தியா கனடா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சீர்குலைக்க பாகிஸ்தான் சதி செய்தது அம்பலமாகி உள்ளது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இந்திய ஏஜெண்டுகள் தொடர்பில் இருப்பதாக கூறி இந்தியா மீது கன்னட பிரதமர் ஜஸ்டின் குற்றம் சுமத்தி வந்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் கன்னட தூதர் பேசினார். அதேபோல் கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவையில் உரையாற்றினார். இதனால் பாகிஸ்தானின் ஐஏஎஸ் உளவு அமைப்பு நிஜாரை கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக ஆதாரங்கள் வெளியாகி உள்ளது. இந்த அமைப்பு சில குழுக்களை வேலைக்கு அமைத்ததன் ஆதாரங்களும் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியா கனடா இடையிலான உறவை சீர்குலைக்க பாகிஸ்தான் செயல்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.














