நாமக்கல் மண்டலத்தில் கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. முட்டைகளின் பண்ணை விற்பனை விலை கடந்த மாதம் 9-ந் தேதி 565 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் முட்டை விற்பனை வரலாற்றில் அது மிக அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 12 நாட்கள் இதே நிலை நீடித்ததால் முட்டையின் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இதனால் நாமக்கல் கோழிப்பண்ணைகள் மற்றும் குடோன்களில் கோடிக்கணக்கான முட்டைகள் தேங்க தொடங்கியது. கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தற்போது வரை 460 காசுகளாக முட்டை விலை நீடிக்கிறது.
இது தொடர்பாக நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது விற்பனை அதிகரித்தாலும் விலை குறைப்பால் தினமும் சராசரியாக 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை நஷ்டமாகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கோழி பணியாளர்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.