தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ராமநவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ராமநவமி யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்கள் வழியாக சென்று கன்னியாகுமரியில் முடிவடையும் இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஞ்சநேயர் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மனுதாக்கல் செய்தார். மனுவினை விசாரித்த நீதிபதிகள் அனுமதி மறுத்ததன் காரணத்தை விளக்க கேட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழி யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரி என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.