திரிபுராவில் வங்கதேச துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் இந்திய தூதருக்கு சம்மன் அளித்தது. இதையடுத்து, இந்திய தூதர் பிரனாய் வெர்மா, இரு நாடுகளின் நல்லுறவை வலியுறுத்தினார். இருப்பினும், அகர்தலாவில் ஏற்பட்ட சம்பவத்திற்கு பின்னர், வங்கதேசம் தனது துணைத் தூதரகத்தில் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், நாட்டு […]

திரிபுராவில் வங்கதேச துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் இந்திய தூதருக்கு சம்மன் அளித்தது. இதையடுத்து, இந்திய தூதர் பிரனாய் வெர்மா, இரு நாடுகளின் நல்லுறவை வலியுறுத்தினார். இருப்பினும், அகர்தலாவில் ஏற்பட்ட சம்பவத்திற்கு பின்னர், வங்கதேசம் தனது துணைத் தூதரகத்தில் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு முன்னர், இஸ்கான் அமைப்பின் முன்னாள் நிர்வாகி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுராவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டம் தான் தூதரக அத்துமீறலுக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu