லெபனானின் தெற்கே உள்ள பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் படை, லெபனானை இலக்காகக் கொண்டு தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், லெபனானின் தெற்கே உள்ள பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் படையினர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், சுரங்கத்திற்குள் சமையலறை, வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி மற்றும் பிற பொருட்கள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலில் நடத்தும் தாக்குதலுக்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் பாதுகாப்பு கழகம் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் முகமது உசைன் அலி அல்-மஹ்மூத் தாக்கி அழிக்கப்பட்டார். இன்னொரு தாக்குதலில், லெபனானின் திரிபோலி பகுதியில், ஹமாஸ் ராணுவ பிரிவின் மூத்த உறுப்பினரான அலா நயீப் அலி கொல்லப்பட்டார்.