டோங்கா தீவில் நேற்று மாலை 7.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென் பசிபிக் பெருங்கடலில், டோங்கா தீவிற்கு அருகே நேற்று மாலை 5.48 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 20.06 டிகிரி தெற்கு மற்றும் 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாக முதலில் அறியப்பட்டது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.