பிரபல இணைய வர்த்தக நிறுவனமான ஈபே நிறுவனத்தில் 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 9% ஆகும்.
ஈபே இணைய வர்த்தக நிறுவனம் தனது நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பணி நீக்க நடவடிக்கையில் களமிறங்கி உள்ளது. நிறுவனத்தின் தலைவர் ஜெமி லைனோ நேற்று ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் இது வெளியாகியுள்ளது. துறை வாரியாக எந்தெந்த பிரிவு ஊழியர்கள் நீக்கப்பட உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஈபே நிறுவனத்தில் 500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு தற்போது மீண்டும் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.