தெலுங்கானா மாநிலத்தில் செம்மரம் மற்றும் மீன் பிடி விநியோகம் தொடர்பான விசாரணை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் நடத்தப்பட்டது.
தெலுங்கானாவில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செம்மரம் மற்றும் மீன் பிடி வினியோகம் தொடர்பான விசாரணைகள் நடத்த உத்தரவிடப்பட்டது. அது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தெலுங்கானா கால்நடை மேம்பாட்டு முகமை தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அரசு விதிமுறைகளை மீறி செம்மர கொள்முதலில் ஈடுபட்டு மோசடி செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் எட்டு அரசு அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது