கூகுள் நிறுவனம் புதிதாக ஜெமினி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. அந்த பரபரப்பு நீங்குவதற்குள், எலான் மஸ்க் தனது கிராக் செய்யறிவு தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் ஏஐ என்ற பெயரில் இயங்கி வரும் எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனம், ‘கிராக்’ செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலையில், எக்ஸ் தளத்தின் பிரீமியம் பயனர்களுக்கு மட்டும், ஒரு வார காலத்திற்கு, கிராக் வெளியிடப் பட்டுள்ளது. இது பற்றி பேசிய எலான் மஸ்க், “எக்ஸ் தளத்தின் தகவல்களை சேகரித்து கிராக் இயங்குகிறது. எனவே, மற்ற செய்யறிவு தொழில்நுட்பத் தளங்களை விட இது கூடுதல் திறனுடன் இருக்கும். அத்துடன், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கிண்டல் செய்யும் வகையில் பதில்களைத் தரும்” என்று கூறியுள்ளார்.