அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிறையில் இருந்தார்; கடந்த செப்டம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். இதற்கான விசாரணையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் அவரின் ஆதரவாளர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமையகத்திலும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜி தலைமையிலுள்ள துறைக்கு உட்பட்ட இடங்களிலும், முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலைகளிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.