தமிழகம் முழுவதும் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிறையில் இருந்தார்; கடந்த செப்டம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். இதற்கான விசாரணையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் அவரின் ஆதரவாளர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமையகத்திலும் […]

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிறையில் இருந்தார்; கடந்த செப்டம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். இதற்கான விசாரணையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் அவரின் ஆதரவாளர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமையகத்திலும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜி தலைமையிலுள்ள துறைக்கு உட்பட்ட இடங்களிலும், முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலைகளிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu