ஸ்பெயின் முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர்.
ஸ்பெயினில் உள்ள ஜராகோசா மாகாணம், வில்லாபிரான்கா டி எப்ரோ நகரில் இன்று அதிகாலை ஒரு முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு, பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதியோர் இல்லத்தில் 82 முதியவர்கள் வசித்திருந்த நிலையில், உயிரிழந்தவர்கள் முதியோர்களா அல்லது பணியாளர்களா என்பதைப் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.