டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பனிமூட்டம் நிலவி வருகிறது.
தலைநகர் டெல்லி உட்பட பல மாவட்டங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விமான போக்குவரத்து சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக காற்றின் தரம் குறித்த ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும் பனிப்பொழிவு காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 11 சர்வதேச விமானங்களும், மூன்று உள்ளூர் விமானங்களும் தரையிறங்குவதில் தாமதமாகி உள்ளன. மேலும் பல விமானங்கள் திருப்பி விடப்படும் ரத்து செய்யப்பயன்படும் வருகின்றன.