நடப்பு ஜூலை மாதத்தில் வெளிநாட்டு பங்குத்தொகை முதலீடுகள் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது. இதுவரை 15352 கோடி அளவில் வெளிநாட்டு முதலீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜூலை இரண்டாம் வாரத்தில் மட்டும் 7390 கோடி அளவில் வெளிநாட்டு முதலீடு பதிவாகியுள்ளது.
நடப்பு 2024 ஆம் ஆண்டில், நீடித்த முறையில் DII களால் பங்குகள் வாங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 60000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர். அதுவே, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் 63200 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளனர். எனவே, இந்திய பங்குச் சந்தையின் திறன் மற்றும் இந்திய பொருளாதாரம் மீதான நம்பிக்கை இதன் மூலம் உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.