பாக்ஸ்கான் நிறுவனம் உலகின் இரண்டாவது பெரிய பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு (BESS) தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் 200 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு உதவித் தொகுப்புகளையும் அறிவித்துள்ளது.
இத்திட்டம் பாக்ஸ்கான் நிறுவனத்தின் மின்சார வாகன (EV) மற்றும் எரிசக்தி உற்பத்தி வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கம் ஆகும். பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியூ கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த போது இந்த திட்டத்தை குறித்து விவாதித்தார். 3+3 வர்த்தக மாதிரியில் மின்சார வாகனங்கள், டிஜிட்டல் சுகாதாரம், மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய துறையில் பாக்ஸ்கான் பணிகளை மேற்கொள்கிறது.