விதிகளை மீறியதற்காக கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு தென்கொரிய அரசு அபராதம் விதித்துள்ளது.
இருப்பிட தரவு சேகரிப்பு தொடர்பான தென்கொரிய நாட்டு சட்ட விதிகளை மீறியதற்காக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது தென்கொரியா அரசு. கூகுளுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளுக்கு 12 லட்சத்து 81,371 ரூபாய் அபராதம் விதித்துள்ளது தொலைத்தொடர்பு ஆணையம். இவர்கள் உள்பட 188 நிறுவனங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2022 -ல் திருத்தப்பட்ட இருப்பிட தகவல் பாதுகாப்பு சட்டத்தின்படி இந்த நிறுவனங்களின் மீறல் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர் கிம் ஹாங் கூறுகையில், தனி உரிமை மற்றும் சமூக பாதுகாப்பு மீது அக்கறை தேவை என்று குறிப்பிட்டார்.