பாகிஸ்தானில் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு - 23 பயணிகள் பலி

August 26, 2024

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் பேருந்தை நிறுத்தி அதில் இருந்த பயணிகள் மீது சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். பயணிகள் ஒவ்வொருவரின் அடையாளங்களை சரி பார்த்த பிறகு அவர் சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது. எனவே, இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அத்துடன், மத ரீதியிலான உந்துதலால் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் […]

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் பேருந்தை நிறுத்தி அதில் இருந்த பயணிகள் மீது சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். பயணிகள் ஒவ்வொருவரின் அடையாளங்களை சரி பார்த்த பிறகு அவர் சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது. எனவே, இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அத்துடன், மத ரீதியிலான உந்துதலால் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் பேருந்து அருகில் இருந்த 12 வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. மர்ம நபரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu