தெலுங்கானாவில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை கைப்பற்றிய ஹெட்டிரோ மருந்து நிறுவனம்

October 17, 2022

தெலுங்கானா மாநிலத்தின் பெஞ்சேரா பகுதியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. அதனை, பிரபல மருந்து நிறுவனமான ஹெட்டிரோ கையகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 130 கோடி ரூபாய்க்கு இந்த ஆலை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 600 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வசதிகளை இந்த ஆலையில் ஏற்படுத்த உள்ளதாக ஹெட்டிரோ அறிவித்துள்ளது. சுமார் 55.27 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஆலை, ஹெட்டிரோ நிறுவனத்தின் பிரதான ஆலையாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், […]

தெலுங்கானா மாநிலத்தின் பெஞ்சேரா பகுதியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. அதனை, பிரபல மருந்து நிறுவனமான ஹெட்டிரோ கையகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 130 கோடி ரூபாய்க்கு இந்த ஆலை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 600 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வசதிகளை இந்த ஆலையில் ஏற்படுத்த உள்ளதாக ஹெட்டிரோ அறிவித்துள்ளது.

சுமார் 55.27 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஆலை, ஹெட்டிரோ நிறுவனத்தின் பிரதான ஆலையாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 2000 புதிய வேலைவாய்ப்புகள் இங்கு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஹெட்டிரோ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி வம்சி கிருஷ்ணா பந்தி உறுதி செய்துள்ளார். மேலும், இந்த ஆலை கையகப்படுத்தலில் PwC பெரும்பங்கு வகித்ததாக ஹெட்டிரோ நிறுவனத்தின் சிறப்பு நிதி ஆலோசகர் தெரிவித்துள்ளார். மேலும், நிலம், ஆலை கட்டமைப்பு மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்துமே ஒன்று சேர கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். ஆனால், அது குறித்த விரிவான நிதி அறிக்கை வெளியிடப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu