அமெரிக்காவில் மில்டன் சூறாவளி வீசியதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர்.
புளோரிடா மாகாணத்தில், சீஸ்டா கீ அருகே, நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதன் போது, மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. பின்னர் மணிக்கு 165 கி.மீ. என்றளவில் காற்றின் வேகம் குறைந்தது. சூறாவளியின் தீவிரம் குறைந்திருந்தாலும், மில்டன் இன்னும் அதிக ஆபத்துள்ள பிரிவாக உள்ளது. ஆர்லேண்டோவுக்கு தென்மேற்கே 60 மைல்கள் தொலைவில் அது மையம் உள்ளது. இதனால், செயின்ட் லூசி கவுன்டி பகுதியில் சிலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளி தாக்கியபோது, நேற்றிரவு 11 மணிக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர். கனமழை பெய்யவும், பெரிய பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மீட்பு பணியிலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.














