தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு பேருந்துகளின் சேவை குறுகிய தெருக்கள் மற்றும் ஊர்களுக்கு இல்லாத நிலையில் வெகு தூரம் நடந்து செல்ல வேண்டிய சிரமம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக அனுமதி அளிக்காமல் இருந்த மினி பஸ்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் மினி பஸ்கள் அதிகபட்சமாக 25 கி மீ வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மினி பஸ்களிலும் ஜி. பி. எஸ். வசதி பொருத்தப்பட உள்ளது. அதில் சென்னையில் சில இடங்களுக்கு மட்டுமே சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளுக்கு சேவை வழங்கலாம் என்பது குறித்து ஆர்டிஓ- கள் முடிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது














