இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் குறித்த 6 தீர்மானங்கள் ஐநா சபையில் கொண்டுவரப்பட்டன. இவற்றில் 5 தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.
போர் நிகழும்போது இஸ்ரேல் தரப்பில் மனித உரிமை மீறல் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரணை கோரும் தீர்மானத்தில் மட்டும் இந்தியா பங்கேற்கவில்லை. மற்றவற்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஜெருசலேம், சிரியா பிராந்தியங்களில் இஸ்ரேல் தங்கள் குடியேற்றங்களை அமைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு, இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு முன்பு, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தக் கோரி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.