அமெரிக்கா - திறன் குறைந்த இந்திய பணியாளர்களின் ஊதியத்தில் 500% உயர்வு

April 26, 2023

அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து வாழும் திறன் குறைந்த இந்திய பணியாளர்களின் ஊதியம் கிட்டத்தட்ட 500% உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரின் ஊதியம் 120% மற்றும் உள்நாட்டிலேயே வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்தோரின் ஊதியம் 40% என்ற அளவில் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், வளைகுடா நாடுகளில் அதிக இந்தியர்கள் பணியாற்றுவதாகவும், அவர்கள் தங்கள் ஊதியத்தில் 70% பணத்தை இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்திற்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் பணி மற்றும் […]

அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து வாழும் திறன் குறைந்த இந்திய பணியாளர்களின் ஊதியம் கிட்டத்தட்ட 500% உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரின் ஊதியம் 120% மற்றும் உள்நாட்டிலேயே வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்தோரின் ஊதியம் 40% என்ற அளவில் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், வளைகுடா நாடுகளில் அதிக இந்தியர்கள் பணியாற்றுவதாகவும், அவர்கள் தங்கள் ஊதியத்தில் 70% பணத்தை இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்திற்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் பணி மற்றும் சமூக நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்ற திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அதிகரிப்பது போலவே, திறன் குறைந்த பணியாளர்களுக்கும் ஊதியம் அதிகரித்து வருவது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில், 184 மில்லியன் புலம் பெயர்ந்தவர்களும், 37 மில்லியன் அகதிகளும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu