இந்தியாவின் நேரடி வரி வசூல் 16.8% உயர்ந்து, 13.73 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளதாக மத்திய நேரடி வரி வசூல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், நாட்டின் மொத்த வரி வசூல் 22.58% உயர்ந்து, 16.68 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வசூல் ஆன வரியில், 2.95 லட்சம் கோடி ரூபாய் திருப்பி செலுத்த வேண்டிய தொகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 59.44% உயர்வாகும். மேலும், இந்த வருட பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட மொத்த வரி வசூலில், 96.67% வரி வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நேரடி வரி வசூல் கணிப்பில் 83.19% எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைகளை கழித்து, கார்ப்பரேட் வரி வசூல் 13.62% மற்றும் தனிநபர் வரி வசூல் 20.06% உயர்வை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.