இந்தியாவில் முதல் முறையாக 'புஷ் புல் ரேக்' எனப்படும் நவீன வசதி கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.இந்தியாவில் பயணிகள் ரயில் தயாரிப்பில் புதியதொரு சாதனையை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை நிகழ்த்தியுள்ளது. இதில் பெட்டிகளின் இரு முனைகளிலும் எஞ்சின்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு எஞ்சின்கள் இருப்பதால் ரயில் முன்னும் பின்னும் செலுத்த இயலும். மேலும் குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகளை கொண்டிருக்கும். இதில் 3 அடுக்கு தூங்கும் வசதி கொண்டு 22 பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளன. மேலும் இந்த ரயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இந்த ரயில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பெட்டிகளை கொண்டிருக்கின்றன. இது வந்தே பாரத் போன்ற ரயில் பயண அனுபவத்தை சாதாரண பயணிகளுக்கு வழங்குவதற்காக புதிய நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் ரயில்வே பெட்டிகளை தொழில்நுட்ப அமைப்பினர் விரைவில் ஆய்வு செய்து அடுத்த சில மாதங்களில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். மேலும் தேவை உள்ள இடங்களுக்கு ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.