உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு காரணமாக சுமார் 570க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காலநிலை, உள்கட்டமைப்பு மாற்றங்களால் நிலம் சரிந்து வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 60 குடும்பங்கள் வெளியேறின. வீடுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பாதுகாப்பு கருதி 29 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜல் சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட ஒன்றிய அரசின் 2 குழுக்கள் ஜோஷிமத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளன. ஜோஷிமத் நகரை மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு புதைவு மண்டலமாக உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. வேறு இடங்களுக்கு குடிபெயர விரும்புவோருக்கு ரூ.4000 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.