கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் கம்பாலாவிற்கு 280 கிமீ தொலைவில் உள்ள புலாம்புலி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் 40 வீடுகள் புதைந்து போயின. இதுவரை 15 உயிர்கள் மீட்கப்பட்டாலும், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழை மீட்பு பணிகளில் சிக்கல்கள் ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் மூடியுள்ளதால் மீட்பு இயந்திரங்களை கொண்டு வர இயலவில்லை. நைல் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.