மதுரையில் ரயில்வேதுறை மற்றும் தபால்துறை இணைந்த புதிய பார்சல் சேவை தேஜஸ் ரயிலில் முதன்முறையாக நேற்று துவங்கியுள்ளது.
வட மாநிலங்களில் சில ரயில்களில் உள்ள இவ்வசதி தற்போது மதுரை ரயில்வே கோட்டத்தில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மதுரை - சென்னை தேஜஸ் ரயிலில் இத்திட்டம் துவக்கப்பட்டது. இதில் முதல்முறையாக பசுமலை தனியார் நிறுவனத்தின் 250 கிலோ ஆயுர்வேத மருந்துகள், போடி நிறுவனத்தின் 300 கிலோ ஏலக்காய் முதன்முறையாக சென்னைக்கு அனுப்பப்பட்டன. இவற்றை தபால் துறையினர் நேரடியாக முகவரியில் சேர்த்து விடுவர். இது குறித்து தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே கட்டணம் தவிர்த்து தபால் துறை சார்பில் கிலோவுக்கு ரூ.6 கட்டண விதிக்கப்பட்டுள்ளது என ௯றினர்.