காசாவின் தெற்கே உள்ள பெனி சுஹைலா நகரில், நேற்று நள்ளிரவு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 6 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
காசாவில் ஒரு வருடத்துக்கு மேல் நடைபெற்று வரும் மோதலில் 42,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்காமல் போர்நிறுத்தம் ஏற்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், காசாவின் தெற்கே உள்ள பெனி சுஹைலா நகரில், நேற்று நள்ளிரவு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 6 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேல் ராணுவம், பொதுமக்களின் உயிரிழப்புக்கு ஹமாஸ் அமைப்பினரே காரணமாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர்கள் பொதுமக்களின் இருப்பிடங்களை மையமாகப் பயன்படுத்துகின்றனர் என்றது.