மியான்மரில் வெள்ளம் காரணமாக 2000 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
வடக்கு மாநிலம் கசின். இங்கு ஐராவதி ஆறு ஓடுகிறது. மியான்மரில் இப்பொழுது கனமழை பெய்து வருவதால் இந்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த கனமழையால் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்து தகவல் இல்லை. ஆனால் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இங்கு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, மடங்கள், தேவாலயங்கள் மற்றும் 30 பள்ளிகள் தற்காலிகமாக முகாம்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
வைமாவ் மற்றும் மியீசினா போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கினர். இதுவரை சுமார் 2000 குடும்பங்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.மீட்சினாவில் ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி சென்றுள்ளது. அது மேலும் உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.