இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஸ்டீல் நிறுவனமான ஜே எஸ் டபிள்யூ, ரஷ்யாவுக்கு, சிறப்பு ரக ஸ்டீலை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, வண்ணம் பூசப்பட்ட ஸ்டீல் ரஷ்யாவுக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மூத்த அதிகாரி இந்த தகவல்களை உறுதி செய்துள்ளார்.
மேலும், தற்போதைய நிலையில், ஆண்டொன்றுக்கு 28 மில்லியன் டன் உற்பத்தி திறனை கொண்டுள்ள ஜே எஸ் டபிள்யூ நிறுவனம், இதனை 2026 ஆம் நிதி ஆண்டுக்குள் 51 மில்லியன் டன் ஆகவும், 2031 ஆம் நிதி ஆண்டுக்குள் 73 மில்லியன் டன் ஆகவும் உயர்த்த இலக்கு நிர்ணயித்து பணி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.