பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், செங்கல்பட்டில் 2000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமையவுள்ளது.
பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான வரைபடத் திட்டத்தை (மாஸ்டர் பிளான்) தயாரிப்பதற்காக, டிட்கோ நிறுவனம் தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இந்த புதிய நகரம் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, நவீன முறையில் உருவாக்கப்பட உள்ளது.