ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தான் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை கிளம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டதால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அரசு உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதில் உரிமையாளர்கள் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில், போக்குவரத்து சட்ட விதிகளுக்கு எதிராக இந்த திட்டம் உள்ளது, காலி ஆம்னி பேருந்துகளை மாநகரத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கும் நேரத்தில் பயணிகளை ஏற்று செல்ல அனுமதிக்கவில்லை. இது பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுத்துவதாக வாதிடப்பட்டது. இதனை கெட்ட நீதிபதிகள் பயணிகள் யாரும் இது குறித்து வழக்கில் தாக்கல் செய்யவில்லை எனவே தாக்கல் விவாதத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. இதனால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.