கனமழையின் காரணமாக ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் எண்ணற்ற சுற்றுலா தளங்கள் உள்ளன. இதனை கண்டு ரசிக்க பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயிலில் ஒருமுறையாவது பயணம் செய்து வருவர்.இந்த நிலையில் நீலகிரி கோவை மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக மலை ரயில் பாதையில் மரங்கள் முறிந்து, மண்சரிவுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 21 நாட்களுக்கு பிறகு இன்று மலை ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.