பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (L.O.C.) பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவத்தின்மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி அளித்து தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தான் தரப்பில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததைப் பற்றி தகவல் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் 2025-ல் நிகழ்ந்த முதல் போர்நிறுத்த மீறலாகும்.