பாகிஸ்தான்: வெள்ள பாதிப்புகளை உணர்த்தும் நாசாவின் புகைப்படம்

September 2, 2022

பாகிஸ்தான் நாடு கடும் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. அதன் தீவிரத்தை உணர்த்தும் வகையில், பாகிஸ்தானின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால், இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அரசின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன், மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இயற்கை […]

பாகிஸ்தான் நாடு கடும் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. அதன் தீவிரத்தை உணர்த்தும் வகையில், பாகிஸ்தானின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால், இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அரசின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன், மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வர, பல உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா 30 மில்லியன் டாலர்களும், ஐநா சபை 160 மில்லியன் டாலர்களும் நிவாரண நிதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த வெள்ளம் இயற்கையினால் ஏற்பட்டது அல்ல என்றும், மனித தவறுகளால் நேர்ந்த காலநிலை மாற்றத்தின் விளைவு என்றும், பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. இதே கருத்தை ஐநா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்தரேசும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஐநா சபையிலும் அவர் உரையாற்றினார். இந்த நிலையில், பாகிஸ்தானின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், சிந்து நதியில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் வரை நிலப்பகுதிக்குள் நீர் புகுந்துள்ளது காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புகள் உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து, சூழலியல் செயற்பாட்டாளர்கள் பலரும், “புவி வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உலக நாடுகளே விழித்துக் கொள்ளுங்கள்” என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu