மூன்றாம் நாளாக தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

March 21, 2025

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.70 கோடி வருவாய் இழப்பு. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர் போன்ற பகுதிகளில் விசைத்தறி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பகுதிகளில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறிகள் மற்றும் 10,000 விசைத்தறி கூடங்கள் இயங்குகின்றன. இந்நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை […]

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.70 கோடி வருவாய் இழப்பு.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர் போன்ற பகுதிகளில் விசைத்தறி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பகுதிகளில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறிகள் மற்றும் 10,000 விசைத்தறி கூடங்கள் இயங்குகின்றன.

இந்நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த பகுதிகளில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டு தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.70 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இன்று மூன்றாவது நாளாகவும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகள் தேக்கம் அடையும் அபாயமும் எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu