புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் 98% வங்கிகளுக்கு திரும்பியுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்தி, அவற்றை வங்கிகளுக்கு திரும்பப் பெற அறிவித்தது. அந்தவகையில், கடந்த 31-ம் தேதி வரை, மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.04% வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக, ரிசர்வ் வங்கி தலைமையிலான பொதுமேலாளர் புனீத் பஞ்சோலி தெரிவித்தார்.