நைஜீரியாவின் பசொரன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் ஒயொ மாகாணம், பசொரன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, நேற்று அந்த பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். பரிசு பொருட்களும் வழங்கப்பட இருந்ததால், கூட்டம் அதிகரித்து நெரிசல் […]

நைஜீரியாவின் பசொரன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் ஒயொ மாகாணம், பசொரன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, நேற்று அந்த பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். பரிசு பொருட்களும் வழங்கப்பட இருந்ததால், கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது. எதிர்பாராத இந்த கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu