பங்குச்சந்தையில் நீடிக்கும் வீழ்ச்சி - முதலீட்டாளர்களுக்கு கோடி கணக்கில் இழப்பு

October 26, 2023

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை, பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி காணப்பட்டது. கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி அளவில் முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று பங்குச்சந்தை விடுமுறை என்பதால், இன்றைய வர்த்தகத்தில் சரிவு நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 522.82 புள்ளிகள் சரிந்து, 64049.06 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு […]

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை, பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி காணப்பட்டது. கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி அளவில் முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று பங்குச்சந்தை விடுமுறை என்பதால், இன்றைய வர்த்தகத்தில் சரிவு நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 522.82 புள்ளிகள் சரிந்து, 64049.06 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 19122.15 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இது திங்கட்கிழமையை விட 159.6 புள்ளிகள் குறைவாகும்.
இன்றைய வர்த்தகத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி, என் டி பி சி, பவர் கிரிட், ஐடிசி, அதானி எண்டர்பிரைசஸ், சிப்லா, அப்போலோ ஹாஸ்பிடல், ஈச்சர் மோட்டார்ஸ், எஸ் பி ஐ லைப் போன்ற அனேகமான பிரபல நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன. அதே சமயத்தில், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, டாடா கன்சியூமர், மாருதி சுசுகி, பாரத ஸ்டேட் வங்கி, நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu