கும்பகோணம் கோட்டம் சார்பில் ஐந்து நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் ஐந்து நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதாக தெரிவித்துள்ளார். சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறையை ஒட்டி திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதைப்போல் சென்னையில் சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்க பட உள்ளன. அதே போல் திருச்சி, கோயம்புத்தூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மீண்டும் பயணிகள் திரும்பி செல்வதற்காக 24,25 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 300 பேருந்துகளும், பிற தடத்தில் 200 பேருந்துகளும் இயக்க படும் என தெரிவித்துள்ளனர்.