ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் ஆகிறது டாடா குழுமம்

July 11, 2023

வரும் ஆகஸ்ட் மாதத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனமான விஸ்ட்ரான் ஆலையை டாடா குழுமம் கையகப்படுத்த உள்ளது. இதன் மூலம், ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாக டாடா வரலாறு படைக்க உள்ளது. ஐபோன் தயாரிப்பை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே வேளையில், வர்த்தக ரீதியாக சீனாவை விட இந்தியா முன்னேறுவதற்கு இது முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழ்நாட்டில், ஐபோன்களுக்கான உலோக பாகங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக […]

வரும் ஆகஸ்ட் மாதத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனமான விஸ்ட்ரான் ஆலையை டாடா குழுமம் கையகப்படுத்த உள்ளது. இதன் மூலம், ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாக டாடா வரலாறு படைக்க உள்ளது.

ஐபோன் தயாரிப்பை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே வேளையில், வர்த்தக ரீதியாக சீனாவை விட இந்தியா முன்னேறுவதற்கு இது முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழ்நாட்டில், ஐபோன்களுக்கான உலோக பாகங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக டாடா குழுமத்தின் சேர்மன் சந்திரசேகரன் குறிப்பிட்டு இருந்தார். தற்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஐபோன் ஆலையும் கைப்பற்றப்பட உள்ளதால், டாடா குழுமத்திற்கு இது மிக முக்கிய முன்னேற்றமாக அமையும் என கருதப்படுகிறது. சுமார் 600 மில்லியன் டாலர்களுக்கு மேலாக இந்த ஆலையின் மதிப்பு கூறப்படுகிறது. இங்கு 10000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, சமீபத்திய ஐபோன் 14 மாடல் இங்கு அசம்பிள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu