ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஜூன் மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஆறு பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டது. மேலும் அங்கு ஊடுருவி வரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் ரொக்கபரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்