இஸ்ரேல் ஈரான் மீது படையெடுத்தால் ஈரான் பெரிய அளவில் பதிலடி கொடுக்கும் என்று ஈரான அதிபர் இப்ராஹிம் ரெய்சி கூறியுள்ளார்.
ஈரானின் டெஹ்ரான் நகரில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அதிபர் இப்ராஹிம் ரெய்சி வீரர்கள் இடையே உரையாற்றினார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஈரான் இந்த நிகழ்ச்சியை கொண்டாடியது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈரானுக்கு தடை விதிக்க முன்வந்துள்ளனர். அதேபோல் இஸ்ரேலிடமும் மோதலை கைவிடும்படி நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்த சூழலில் இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்துவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். இன்னொரு முறை இஸ்ரேல் தவறு செய்தால் ஈரான் பதில் தாக்குதல் நடத்தும். இஸ்ரேல் சிறிய அளவில் படை எடுத்தாலும் பெரிய அளவில் ஈரான் தாக்குதல் நடத்தும் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் கூறியுள்ளார். தற்காப்புக்கான நடவடிக்கைக்காகவே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.