வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைகிறது - வானிலை மையம்

November 10, 2022

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கன, மிக கன மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு உள்ளது. தாழ்வு பகுதி வலுவடைந்து வடமேற்கு […]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கன, மிக கன மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு உள்ளது. தாழ்வு பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும். இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ, தாழ்வு மண்டலமாகவோ வலுவடைய வாய்ப்பு உள்ளது.

இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை, நாளை மறுநாள் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவ.13, 14 தேதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu