திருச்செந்தூர் முருகன் கோயிலில் திடிரென 100 அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது.
தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கூட்டம் அலைமோதியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி அதிகாலையிலேயே பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கோயிலில் குவிந்தனர். நேற்று நண்பகலில் திடீரென கடல் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. எனினும் எவ்வித பதற்றமும் இன்றி பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
கடல் உள்வாங்கி கடற்பாறைகள் வெளியே தெரிந்ததால் ஒரு சில பக்தர்கள், பாறைகளின் இடையே கிடந்த சங்கு, சிப்பிகளை சேகரித்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் கடல் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது. வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் நேற்று திடீரென கடல் உள்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.