டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிளர்க் 3 போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது, தேர்வாளர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்க்க 21-ந்தேதி வரை தேர்வாளர்கள் தங்கள் விவரங்களை பதிவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.