அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும், தேவையெனில் அமெரிக்க படைகளை பயன்படுத்தவும் முடியும். அப்பகுதியில் உள்ள வெடிகுண்டுகள், ஆயுதங்களை அகற்றுவோம். சேதமான கட்டிடங்களை நீக்கி, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். பொருளாதாரத்தை மேம்படுத்தி, மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி வழங்குவோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தால் அமைதி நிலை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, "டிரம்பின் யோசனை வரலாற்றை மாற்றக்கூடியது. இது மத்திய கிழக்கு அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்தும். இஸ்ரேல் இன்னும் வலுவாகிறது. ஆனால் ஈரானின் பயங்கரவாத அச்சுறுத்தலும் நீங்கவில்லை. எங்கள் பிராந்தியத்தின் எதிர்காலத்தையும் அமைதியையும் பற்றி ஆலோசித்தோம்" என்று கருத்து தெரிவித்தார்.