உலகத்தில் உள்ள பெருங்கடல்களை பாதுகாக்கும் வகையில், ஐநா உறுப்பு நாடுகள், வரலாற்று உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. பெருங்கடலில் உள்ள பல்லுயிர்களின் பெருக்கத்தை பாதுகாக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பேச்சு வார்த்தையில் 200 உறுப்பு நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்துள்ளன.
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், 30% பெருங்கடல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, அந்த பகுதிகளில், மீன் பிடித்தல், கப்பல் போக்குவரத்து, ஆழ்கடல் சுரங்கம் போன்ற செயல்பாடுகள் தடை செய்யப்பட்டதாக மாற்றப்படும். இதனால், அந்த பகுதிகளில் பெருங்கடல் பல்லுயிர்கள் பாதுகாக்கப்படும் என்று கருதப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இதற்கான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்து, தற்போது உடன்படிக்கை கையெழுத்தாகும் நிலை எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.