உத்தரகாண்டில் இன்று அதிகாலை அளவில் நான்கு முறை அடுத்தடுத்த இடங்களில் லேசான நில அதிர்வு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை நான்கு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் பிதோராகர்ஹ் மாவட்டத்தை சுற்றி ஏற்பட்டுள்ளது. இது இந்தியா சீனா எல்லையில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
இதன் முதல் அதிர்வு ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து 1.37, 2.18, 6.52 என மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.