விப்ரோ தோற்றுநர் அசிம் பிரேம்ஜி, ஒரு கோடிக்கும் அதிகமான பங்குகளை அவரது 2 மகன்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இவற்றின் மதிப்பு 500 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த வார நிலவரப்படி, விப்ரோ நிறுவனத்தின் 22.58 கோடி பங்குகள் அசிம் பிரேம்ஜி வசம் இருந்தன. இந்த நிலையில், ரிஷத் மற்றும் தாரிக் ஆகிய இரு மகன்களுக்கும் தலா 5115090 பங்குகளை அவர் பரிசளித்துள்ளார்.
அசிமின் மூத்த மகன் ரிஷத், விப்ரோ நிறுவனத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். இளைய மகன் தாரிக் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையில் பணி செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 20ஆம் தேதி, அசிம் பிரேம்ஜி 500 கோடி ரூபாய் பங்குகளை வழங்கி உள்ளார். அவர் வழங்கிய ஒவ்வொரு பங்கும் 496 ரூபாய் மதிப்புடையதாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், விப்ரோ நிறுவனத்தின் சொந்த குடும்பத்தாரிடம் 4.43% விப்ரோ பங்குகள் உள்ளன. அசிம் பிரேம்ஜி 4.12% , அவரது மனைவி யாஸ்மின் 0.05% , அவர்களது இரு மகன்கள் தலா 0.13% பங்குகளை கொண்டுள்ளனர்.