நாசாவின் டார்ட் திட்டத்தில் உடைந்த விண்கல் பாறைகள் - ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடிப்பு

பூமியை நோக்கி வரும் விண்கல்லின் பாதையை திசை திருப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டிருந்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 2022 ல், டார்ட் திட்டத்தின் கீழ், விண்கல் ஒன்றின் பாதை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. டார்ட் திட்டத்தின்படி, டைடிமாஸ் என்ற பெரிய விண்கல்லை சுற்றி வரும் டைமார்பஸ் என்ற சிறிய விண்கல் மீது, வேண்டுமென்றே விண்கலம் ஒன்று மோதப்பட்டது. இந்த மோதலின் விளைவாக, விண்கல் பாதையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, இந்த மோதல் விளைவின் போது சிதறிய விண்கல் பாறைத் […]

பூமியை நோக்கி வரும் விண்கல்லின் பாதையை திசை திருப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டிருந்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 2022 ல், டார்ட் திட்டத்தின் கீழ், விண்கல் ஒன்றின் பாதை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. டார்ட் திட்டத்தின்படி, டைடிமாஸ் என்ற பெரிய விண்கல்லை சுற்றி வரும் டைமார்பஸ் என்ற சிறிய விண்கல் மீது, வேண்டுமென்றே விண்கலம் ஒன்று மோதப்பட்டது. இந்த மோதலின் விளைவாக, விண்கல் பாதையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, இந்த மோதல் விளைவின் போது சிதறிய விண்கல் பாறைத் துண்டுகளை ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.

டார்ட் திட்டத்தில், மோதல் விளைவு ஏற்படுத்தப்பட்ட போது 37 பாறை துண்டுகள் வெளிப்பட்டன. விண்வெளியில் சிதறிய அவை, 1 மீட்டர் முதல் 7 மீட்டர் வரை அகலம் உடையதாக இருந்தன. அவற்றை ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இதே போல, பூமியை நோக்கி வரும் விண்கல்லை திசை திருப்பும் போது பல்வேறு பாறை தொண்டுகள் சிதறலாம் எனவும், அவற்றால் பூமிக்கு ஆபத்து நேருமா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கு, ஹப்பிள் தொலைநோக்கியின் புகைப்படங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu